ADDED : ஜன 27, 2026 10:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே கேட் மூடப்படும் போது உள்ளே நுழைந்த லாரி ரயில்வே கேட்டை இடித்து சேதப்படுத்தியது.
புது தாராபுரம் ரோட்டில் சத்யா நகர் அருகே ரயில்வே கேட் உள்ளது. வழக்கமாக ரயில் கடக்கும்போது ரயில்வே கேட் அடைக்கும் போது வாகனங்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி கேட் அடைக்கப்படும்.
இந்நிலையில் நேற்று மாலை கோவையிலிருந்து மதுரை சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரத்தில் கேட் அடைக்க எச்சரிக்கை ஒலி உடன் கேட் அடைக்கப்பட்டது. அப்போது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி கேட்டில் மோதியது.
இதில் ரயில்வே கேட் சேதமடைந்தது. பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

