ADDED : மார் 31, 2025 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : -சாணார்பட்டி மேட்டுக்கடை மல்லத்தான் பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்கள் நலன் வேண்டி அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜையை சபை நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் வத்தல் மூடை மூடையாக கொட்ட வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் கோயிலில் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். கோயில் கோசாலை நாட்டு மாடுகளுக்கு கோபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.