ADDED : மார் 03, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கல்லுாரி மாணவர் லட்சுமணன் 20. காணப்பாடி ரோட்டில் டூவீலரில் சென்ற போது சித்துார் மணிகண்டன் 24, அவரை இடிப்பது போல் சென்றதால் தகராறு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மணிகண்டன் தனது சமூக வலைதளத்தில் லட்சுமணனை மிரட்டி குறுந்தகவல் அனுப்பினார். இதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது நண்பர்களும் செங்குளத்துபட்டி சென்று லட்சுமணனை தாக்கினர். மணிகண்டனை வடமதுரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
