
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி கே.சி.பட்டியில் கில்கால் ஸ்போர்ட்ஸ் அகாடமி,திண்டுக்கல் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து பங்கேற்றனர். மூன்று பிரிவாக நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.