ADDED : அக் 21, 2024 05:31 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரையில் மார்க்சிஸ்ட் ஒன்றிய கோரிக்கை மாநாடு நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் சம்சுதீன் வரவேற்றார். வேலையறிக்கையை ஒன்றிய செயலாளர் மலைச்சாமி வாசித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், முத்துச்சாமி, வசந்தாமணி, மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கர், சண்முகம் பங்கேற்றனர். வடமதுரை தாலுகா அமைக்க வேண்டும்.
காவிரி உபரி நீரை வேடசந்துார் தொகுதி குளங்களில் நிரப்ப வேண்டும். வடமதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
