ADDED : ஜூலை 06, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: இலவச மின்சாரம் வேண்டி தொடர்ந்து இருபது ஆண்டுகளாக போராடி உயிர் தியாகம் செய்த 59 விவசாயிகளின் தியாகத்தை போற்றும் வகையில், ஒட்டன்சத்திரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க நாள் ஊர்வலம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை விகித்தார். மாநில நிதி குழு துணை த் தலைவர் கோனேரிப்பட்டி பாலு, இனாம் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வெல்கேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் சவுந்தரபாண்டியன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாந்தகுமார் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் செக்போஸ்டில் தொடங்கி தாராபுரம் ரோட்டில் ஊர்வலம் முடிந்தது.