ADDED : செப் 06, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் டாக்டர்.ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதிபெறும் மேல்நிலைப்பள்ளி , தொடக்கப்பள்ளிகளில் மிலாடி நபி கொண்டாடப்பட்டது.
பிள்ளையார் நத்த மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகி அப்துல்முத்தலிப் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பேகம்சாஹிபா துவக்கப்பள்ளி தலைமையாசிரியை பாத்திமா மேரி, அசனத்புர தொடக்கப்பள்ளி தலைமையாசிரியாரியை அம்பிகா தேவி கலந்து கொண்டனர்.
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வர்ஷினி வரவேற்றார். பேகம்சாஹிபாநகர , அசனாத்புர தொடக்கப்பள்ளியிலும் கொண்டாடப்பட்டது.