ADDED : ஜன 17, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி ஆயக்குடி கொய்யா மார்க்கெட் திடலில் இயற்கையை போற்றுவோம் பசுமையை பாதுகாப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்த மாரிமுத்து நினைவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
டி.எஸ்.பி., தனஞ்செயன் துவங்கி வைத்தார். ஆயக்குடி முதல் சட்டப் பாறை வரை 16 கிலோ மீட்டர் போட்டி நடைபெற்றது. முதல் பரிசு அஜித், இரண்டாம் பரிசு பெங்களூரை சேர்ந்த தருமன், மூன்றாம் பரிசு சுரேஷ் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

