ADDED : ஏப் 25, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சூரியூர் பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றி கொண்டு மினிவேன் ஒன்று நத்தம்- மதுக்காரம்பட்டி நோக்கி சென்து.
சரவணபாண்டியன் 40, ஒட்டினார். மதுக்காரம்பட்டி வந்த போது மின் ஒயரில் உரசியதில் வேனில் இருந்த வைக்கோலில் தீ பிடித்து எரிய தொடங்கியது.
அப்பகுதி மக்கள் வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளி வேனை அப்புறப்படுத்தினர். நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

