UPDATED : செப் 12, 2026 09:52 PM
ADDED : செப் 12, 2026 09:14 PM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு சென்ற மினிவேனை டிரைவர் பாண்டி 40, ஓட்டினார்.
நத்தம் நெடுஞ்சாலை கணவாய்பட்டி கருப்பு கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் கவிழ்ந்தது. வேனில் இருந்த தேங்காய்கள் ரோட்டில் சிதறியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. பாண்டி லேசான காயத்துடன் தப்பினார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
