ADDED : டிச 17, 2025 06:01 AM

பழநி: பழநி அ.கலையம்புத்துார் அக்ரஹாரம் பகுதியில் மார்கழி மாத பஜனை துவங்கியது.
பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் பஜனை பாடல்கள் பாடி தெரு முழுவதும் வலம் வருவர்.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இந்தாண்டு மார்கழி துவங்கி நேற்று முதல் அப்பகுதி பஜனை குழுவினர் பஜனையை துவக்கினர். ஸ்ரீ கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு பஜனை துவங்கியது.
கீர்த்தனைகள், திருப்பாவை, திருவெம்பாவை, பதிகங்கள், நாமாவளி பாடல்களை பாடியப்படி வந்தனர். காலை 7:30 மணிக்கு கோயிலில் பிரசாதங்கள் வழங்கி பஜனையை நிறைவு செய்தனர். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகரிலும் வரதராஜ பெருமாள் கோயில் குழுவினர் பஜனை பாடி வலம் வந்தனர். மார்கழி மாதம் முடியும் வரை தொடர்ந்து அதிகாலையில் பஜனை பாடல்கள் பாடி வருவார்கள்.

