ADDED : மே 02, 2025 06:49 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி, கிருஷ்ணர் கோயில் சந்து பகுதியை சேர்ந்த தாய் ஜெயா 65, மகன் வினோத் பிரபு 35. இவர்கள் கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கதினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்தனர். விசாரணையில் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
