ADDED : நவ 06, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மணப்பச்சேரியை சேர்ந்தவர் முருகன் 55.இவரது மனைவி அழகுமீனாள் 50. இவர் நேற்று முன்தினம் தனது மகன் சரவணபாண்டியுடன் 24, உடன் டூவீலரில் நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்.
பூதகுடி பிரிவு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் அழகுமீனாள் இறந்தார். சரவணபாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

