ADDED : ஜன 03, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி இட்டேரி ரோடு பகுதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் காய்கனி கமிஷன் மண்டி செயல்படுகிறது.
வாகன ஓட்டிகள் தற்போது வரை ரூ.25 சுங்க கட்டணமாகவும், சரக்கு கட்டணமாக பெட்டிக்கு ரூ.2 வழங்கி வரும் நிலையில் சுங்க கட்டணம் ரூ.50 அதிகரிப்பதை கண்டித்து காய்கறி ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் போராட்டம் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை பின் வாகனங்களை கமிஷன் கடைகளுக்கு அனுமதித்தனர்.