/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.எஸ்.பி., பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
எம்.எஸ்.பி., பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா
எம்.எஸ்.பி., பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா
எம்.எஸ்.பி., பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜன 22, 2026 05:47 AM

திண்டுக்கல்: - திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் விளையாட்டு சங்கங்களின் மாநில பொறுப்பேற்றமைக்குப் பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு தடகள சங்க புதிய செயலாளராக பதவி ஏற்றுள்ள எம்.சிவகுமார், தமிழ்நாடு தடகள சங்கத்தின் இணைத்தலைவராக பதவி ஏற்றுள்ள துரை, திண்டுக்கல் மாவட்ட பால் பேட்மிட்டன் சங்க செயலாளர் விஜய், பிராந்திய கூடைப்பந்து சங்கம், திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் செண்பகமூர்த்தி ஆகியோர் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள். விளையாட்டு சங்கங்களின் மாநில பொறுப்பேற்றமைக்குப் பள்ளியின் சார்பாக பாராட்டு விழா எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்தது.
பள்ளி தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க பொருளாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சகாய சேவியர் ,
சிறப்பு விருந்தினர்களாக ராம்சன்ஸ் கல்விக்குழும தாளாளர் ராமசாமி, மாவட்ட இறகுபந்து கழக செயலாளர் நாராயணன், கைப்பந்து கழகத்தின் செயலாளர் ராஜசேகரன், விஸ்வா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பொறியாளர் தர்மா, பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கர்ணன் பேசினர்.
தலைமை ஆசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.

