/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த ரவுடி கைது
/
நத்தத்தில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த ரவுடி கைது
ADDED : ஆக 21, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம்- அண்ணாநகரை சேர்ந்தவர் ரபீக்ராஜா 29.இவர் மீது திருட்டு, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று முன்தினம் மதியம் பஸ் ஸ்டாண்டில் கையில் அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்தார்.
குட்டூரை சேர்ந்த ராஜாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்தார். இது போல் பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்களையும் மிரட்டினர்.
இதை பார்த்த சிலர் கடைகளை அடைத்து விட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை தொடர்ந்து ரபீக்ராஜாவை நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் கைது செய்தார்.