sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருவள்ளூர் கலெக்டருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

/

திருவள்ளூர் கலெக்டருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

திருவள்ளூர் கலெக்டருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

திருவள்ளூர் கலெக்டருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம்


ADDED : மே 31, 2025 01:16 AM

Google News

ADDED : மே 31, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திருத்தணியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளில் பேசியதாக தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்க மாநில பொதுச்செயலர் கந்தசாமி, மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்ற அம்மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்களை ஊடகங்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அதோடு அவர்கள் செய்யும் பணியினை கொச்சைபடுத்தும் வகையில் பேசி உள்ளார். இதற்கு தேசிய ஆசிரியர் சங்கம் கண்டனத்தை தெரிவிக்கிறது. மாநிலம் முழுவதும் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலும், கடுமையாக பணி செய்து வரும் ஆசிரியர்களிடம் இதுபோல் நடந்து கொள்வது ஆசிரியர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கற்பித்தல் ஆர்வத்தை குறைத்து விடும் அவல நிலையை நோக்கி இது சென்று விடும். பல மாவட்டங்களில் சிறந்த ஆசிரியர்களை கலெக்டர்கள் பாராட்டி வரும் நிலையில் திருவள்ளூர் கலெக்டரின் செயல்பாடு வருத்தத்திற்குரியது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதே சிரமமாக உள்ள இன்றைய சூழலில் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. பள்ளி சூழலை, மாணவர்களின் நிலை பற்றி அறியாமல் அவர்களை பள்ளிக்கு வர வைப்பதற்கான வழிமுறை செய்யாமல் விளம்பர நோக்கில் நடத்து கொள்கின்றனர்.

ஆசிரியர்களிடம் அதிகாரத்தை காட்டாமல் மாணவர்களை பள்ளிக்கு வர வைக்கும் வேலையில் இறங்கலாம். இது போன்ற சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு அவபெயர் ஏற்படுத்தும் என்பதை கல்வித்துறை அமைச்சரும், முதல்வரும் கவனிக்க வேண்டும். இதுபோல் வேறு மாவட்டங்களில் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us