sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தனுஷ் - நயன்தாரா மோதல் முற்றுகிறது; ஆவணப்படத்தில் இடம் பெற்றது 3 வினாடி வீடியோ!

/

தனுஷ் - நயன்தாரா மோதல் முற்றுகிறது; ஆவணப்படத்தில் இடம் பெற்றது 3 வினாடி வீடியோ!

தனுஷ் - நயன்தாரா மோதல் முற்றுகிறது; ஆவணப்படத்தில் இடம் பெற்றது 3 வினாடி வீடியோ!

தனுஷ் - நயன்தாரா மோதல் முற்றுகிறது; ஆவணப்படத்தில் இடம் பெற்றது 3 வினாடி வீடியோ!

15


ADDED : நவ 17, 2024 06:50 PM

Google News

ADDED : நவ 17, 2024 06:50 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடிகர் தனுஷின் எதிர்ப்பையும் மீறி, சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சியை, நயன்தாரா தனது ஆவணப்படத்தில் சேர்த்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த 2022ம் ஆண்டு இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரபல ஓடிடி தளத்தில் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் ஆவணப்படமாக நாளை (நவ., 18) வெளியாக இருக்கிறது.

இந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், 'நானும் ரவுடி தான்' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சி தான் தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

''நானும் ரவுடி தான்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி, நயன்தாரா நடித்த போது, இருவருக்கும் இடையிலான காதல் உருவானதாக சொல்லப்படுகிறது. எனவே, சென்டிமென்டிற்காக, அந்தப் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் இந்த ஆவணப்படத்தில் பயன்படுத்த இருவரும் முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அதற்கான அனுமதியை அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வழங்காததால், இந்த ஆவணப்படம் 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை என்று நயன்தாரா கூறியிருந்தார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் தங்களுடைய கேமிராவில் எடுத்த காட்சிகளை பயன்படுத்தினாலும், ரூ.10 கோடி கேட்பதா? என்று தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷ் இதுவரையில் வாய் திறக்காத நிலையில், முறையாக வந்து கேட்காததால் தான் தனுஷ் அனுமதி வழங்கவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால், சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சிகளை நயன்தாரா நீக்குவாரா? இல்லையா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்து வந்தது.

இந்த நிலையில், ஆவணப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், நடிகர் தனுஷின் எதிர்ப்பை மீறி, பட ஷூட்டிங்கின் போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒன்றாக இருக்கும் 3 வினாடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், இரு தரப்பினரிடையேயான மோதல் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் குறித்து தனுஷ் தன்னிடம் விமர்சித்துப் பேசியதாக, நடிகை ஒருவர் பேசும் காட்சிகள் நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us