sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதிய குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

/

புதிய குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

புதிய குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

புதிய குடிநீர் இணைப்பு பணி துவக்கம்


ADDED : மார் 11, 2024 06:26 AM

Google News

ADDED : மார் 11, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது துவங்கப்பட்டுள்ளது.

பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டது. அதன் பின் 2010ல் ரூ. 100 டெபாசிட் கட்ட அறிவிப்பு வெளியானது. இதில் நுாற்றுக்கணக்கான நபர்கள் டெபாசிட் கட்டினர்.

கிடப்பில் போடப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் குடிநீர் இணைப்பு வேண்டி போராட்டங்கள் நடத்தினர். 2023 ல் ரூ.10,100 டெபாசிட் கட்ட அறிவிப்பு வெளியானது.

அதில் 2010 டெபாசிட் கட்டியவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை எழுந்தது. அதன் பின் ஏராளமானோர் குடிநீர் இணைப்புக்காக டெபாசிட் கட்டினர். இந்நிலையில் நேற்று (மார்ச் 9) நெய்க்காரப்பட்டி பேரூராட்சி ஒன்றாவது வார்டு பங்களா தெற்கு தெருவில் வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கியது.

தலைவர் கருப்பாத்தாள், துணைத் தலைவர் சகுந்தலாமணி, பேரூர் செயலாளர் சையது அபுதாஹிர், செயல் அலுவலர் அன்னலட்சுமி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us