ADDED : மார் 12, 2026 05:24 AM

வடமதுரை: வடமதுரையில் அடிக்கடி விபத்து நடக்கும் நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்ட ஆயத்த பணிகள் துவங்கியது.
வடமதுரையில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலை குறுக்கிடும் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் ஒவ்வொரு கன மழைக்கும் நீர் வெளியே வழியின்றி தேங்குகிறது. இவை குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. தற்போது ரூ. 30 கோடி திட்ட மதிப்பீட்டில் இங்கு மேம்பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது. இதற்காக நெடுஞ்சாலைக்குரிய இடங்களை அளவீடு செய்து எல்லை கற்கள் நடப்பட்டுள்ளது. எல்லைக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என வணிக நிறுவனங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

