ADDED : பிப் 13, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்சனாக ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ரூ.19 ஆயிரத்து 500 காலமுறை ஊதியம், உதவியாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
10 நாட்களாக தொடரும் போராட்டம் நேற்று தொடர்ந்தது. மாவட்டத் தலைவர் இந்திரா , மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வி, மகாலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

