ADDED : மார் 05, 2026 04:59 AM
நெய்க்காரப்பட்டி: பழநி அருகே கோதைமங்கலத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பாலகிருஷ்ணன் 29. இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜோசப் 55, மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி 45, சித்ரா 50, ஆகியோரை தொடர்பு கொண்டனர்.
இவர் கள் விருதுநகரைச் சேர்ந்த திருமணமான ராமலட்சுமியை 28, திருமணமாகாத பெண் எனக்கூறி பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர்.
இதற்காக அவரிடம் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டனர்.
பாலகிருஷ்ணனிடம் ராமலட்சுமி இரண்டு பவுன் நகை பெற்றுக்கொண்டார்.
இருவருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் நடந்தது. பின் சில நாட்களில் ராமலட்சுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த ஜோசப், கிருஷ்ணவேணி, சித்ரா கேட்டபோது நீங்கள் ராமலட்சுமியை வன்கொடுமை செய்ததாக மிரட்டினர்.
இதையடுத்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் அளித்த புகாரில் பழநி தாலுகா போலீசார் ஜோசப்பை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

