ADDED : ஆக 08, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி ,கருத்தரங்கம் நடைபெற்றது. செட்டிநாயக்கன்பட்டி தனியார் மஹாலில் நடந்த இதை கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார்.
வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், இயற்கை விவசாயிகள், தனியார் இயற்கை இடுபொருள் உற்பத்தி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், தனியார் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேசினர். வேளாண்இணை இயக்குநர் பாண்டியன், நேர்முக உதவியாளர் நாகேந்திரன், விதை சான்றளிப்பு உதவி இயக்குநர் சின்னசாமி கலந்துகொண்டனர்.