/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இறகுப்பந்தில் சாதித்த பழநி பள்ளி மாணவி
/
இறகுப்பந்தில் சாதித்த பழநி பள்ளி மாணவி
ADDED : டிச 25, 2025 06:30 AM

பழநி: பழநி பாரத் வித்யா பவன் பள்ளி மாணவி ஜெயசப்தஸ்ரீ தேசிய அளவிலான தமிழக அணியில் விளையாடி இறகு பந்து போட்டியில் சாதனை புரிந்துள்ளார்.
தேசிய அளவிலான 14 வயது எஸ்.ஜீ.எப்.ஐ., இறகுப்பந்து போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் நகரில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். குழு பிரிவில் பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஜெயசப்தஸ்ரீ 14 வயதுக்குட்பட்ட தமிழக அணிக்கான இறகு பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இதே மாணவி ஒற்றையர் இறகு பந்து போட்டியில் வெண்கல பதக்கத்தை பெற்றார். மாணவியை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் மோகன்ராஜ், ஆசிரியர்கள் சுரேந்திரன், காளீஸ்வரி, காயத்ரி பாராட்டினர்.

