/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கம்பிளியம்பட்டி வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
/
கம்பிளியம்பட்டி வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
கம்பிளியம்பட்டி வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
கம்பிளியம்பட்டி வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
ADDED : ஜன 24, 2026 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை வசந்த பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பூஜையை பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள்மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். பல்வேறு மாவட்ட பக்தர்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர்.

