ADDED : மார் 15, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : -சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதையொட்டி வராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பஞ்சமி யாக பூஜையை வராகி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமியாக காட்சி தந்தார். அன்னதானம் நடந்தது.

