நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : பெரியரெட்டியபட்டி விநாயகர், முருகன், மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 23ல் காப்பு கட்டுதல், அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது.ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்தனர்.
நேற்று மாலை மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. ஏற்பாட்டினை கோயில் தக்கார் பாலசரவணன், பெரியரெட்டியபட்டி, சின்னரெட்டிபட்டி, புதுக்கலிங்கம்பட்டி, அணைக்குளம்புதுார், காரக்கட்டூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

