/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' பூங்காவில் கவாத்து பணி
/
'கொடை' பூங்காவில் கவாத்து பணி
ADDED : பிப் 18, 2026 07:25 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக கவாத்து எடுக்கும் பணி துவங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் தோட்டக்கலைத்துறையின் ரோஜா பூங்கா 10 ஏக்கரில் உள்ளது. இங்கு 1500 வகையான ரோஜா மற்றும் 16 ஆயிரம் செடிகள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரியில் ரோஜா செடிகள் கவாத்து எடுக்கப்பட்டு பராமரிப்பு களப்பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி நேற்று ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கப்பட்டு கார்பன்டை ஆக்சிகுளோரைடு செடிகளுக்கு பூசப்பட்டன. தொடர்ந்து தொழு உரம் , நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகளை தோட்டக்கலை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி தோட்டக்கலை இயக்குனர் பிரபு, தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி பார்வையிட்டனர். கவாத்து எடுத்த ஒன்றரை மாதத்தில் செடிகள் நன்கு தளிர்த்து ஏப்ரல், மே மாதத்தில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

