ADDED : மார் 14, 2026 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: மக்கள் மத்தியில் எவ்வித அச்சமும் ஏற்படாமல் அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடமதுரையில் துணை ராணுவத்தினருடன் இணைந்து போலீசார் ஒத்திகை அணிவகுப்பு நடந்தது. நால்ரோடு சந்திப்பில் துவங்கி போலீஸ் ஸ்டேஷனில் முடிந்தது.
பயிற்சி கூடுதல் எஸ்.பி., நேகா தலைமை வகித்தார். டி.எஸ்.பி., பவித்ரா, சி.ஆர்.பி.எப்., டி.எஸ்.பி., ராதா, இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் பங்கேற்றனர்.

