நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை காந்திய சிந்தனை - அமைதியியல் துறை சார்பில், சர்வோதய தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடந்தது.
காந்தி அருங்காட்சியகத்தில் இதற்கான துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.
சமூக சேவகர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் துணை இயக்குனர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காந்திய சிந்தனையாளர்கள், ஊர்வலத்தில் பங்கேற்றனர். அமைதி ஊர்வலத்தில் கதர் ஆடை நெய்யும் ராட்டை உடன், ரயில்வே கேட் அருகே மகாத்மா காந்தி பேசிய நினைவு ஸ்துாபியில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அறக்கட்டளை வளாகத்தில் உள்ள காந்தி நினைவுத் துாணில் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.-

