sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திறந்த வெளிகளில் மது குடிப்போரால் தொல்லை: நடவடிக்கை இல்லாமல் மக்கள் தவிப்பு

/

திறந்த வெளிகளில் மது குடிப்போரால் தொல்லை: நடவடிக்கை இல்லாமல் மக்கள் தவிப்பு

திறந்த வெளிகளில் மது குடிப்போரால் தொல்லை: நடவடிக்கை இல்லாமல் மக்கள் தவிப்பு

திறந்த வெளிகளில் மது குடிப்போரால் தொல்லை: நடவடிக்கை இல்லாமல் மக்கள் தவிப்பு

1


UPDATED : டிச 07, 2025 08:31 AM

ADDED : டிச 07, 2025 05:34 AM

Google News

UPDATED : டிச 07, 2025 08:31 AM ADDED : டிச 07, 2025 05:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி மாவட்ட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இப்பகுதிகளில் பொது இடங்களில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளின் உள்ள கடைகளுக்கு முன்புறத்தில் இரவு நேரங்களில் மது குடித்து விட்டு அப்ப பகுதியில் அசுத்தம் செய்து சென்று விடுகின்றனர்.

விவசாய நிலங்களில் அருகே மது குடித்துவிட்டு வயல்களில் உடைந்த பாட்டில்களை போட்டு செல்கின்றனர். இதனால் வயல் வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் காயமடைகின்றனர். குளத்துக்கரைகள் ,ஆற்றுப் பாலங்கள் ,பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை மினி பாராகவே குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழநி,கொடைக்கானல் சாலையில் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் இருபுறமும் சாலை ஓரங்களில் மது அருந்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மது குடிக்கும் நபர்கள் அரைகுறை ஆடையுடன் படுத்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது. மேலும் மது போதையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் நிலை உருவாகிறது.

ஓடும் பஸ்சிலே குடிக்கின்றனர்


மது அருந்திவிட்டு முக்கிய தெருக்களில் உள்ள கடை வாசல்களில் படுத்து துாங்குகின்றனர். காலை நேரங்களில் அவர்களை அப்புறப்படுத்த கடைக்காரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அந்த இடத்தில் குடிகாரர்கள் அசுத்தம் செய்து வைப்பதால் சுத்தம் செய்ய மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மதுபோதையுடன் பஸ்சில் பயணம் செய்யும் நபர்கள் மற்ற பயணிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். பயணிகள், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். சிலர் மது பாட்டில்களை வாங்கி வந்து ஓடும் பஸ்சிலே குடிக்கின்றனர். இதனால் கண்டக்டர் ,டிரைவரிடம் வாக்குவாதம் ஏற்படுகிறது. பொது இடங்களில் மது குடிப்பதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைரமுத்து, பா.ம.க., திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர், பழநி.








      Dinamalar
      Follow us