/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆடுகள் திருட்டால் தவிக்கும் மக்கள்
/
ஆடுகள் திருட்டால் தவிக்கும் மக்கள்
ADDED : பிப் 06, 2026 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை வடமதுரை அய்யலுார் சுற்றுப் பகுதி கிராமங்களில் ஏராளமானோர் ஆடுகள் வளர்ப்பு மூலம் வாழ்க்கை நடத்தும் நிலையில் உள்ளனர். ஆடுகளை ரோட்டோரங்கள் மேய்ச்சலுக்கு விடும்போது, வீடுகளில் கட்டி வைத்திருக்கும் போதும் ஆடுகள் திருடு போகின்றன. கார், டூவீலர்களில் வலம் வரும் கும்பல் திருடி சென்றுவிடுகின்றனர்.
அய்யலூர், முடக்குபட்டி, கருவார்பட்டி, வேங்கனுார், வேல்வார்கோட்டை, காணப்பாடி பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.இதனால் ஆடு வளர்ப்பை நம்பி உள்ள மக்கள் கடும் அதிருப்தி, வேதனையுடன் உள்ளனர்.இதை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரித்து திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

