/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
/
'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : ஜன 28, 2026 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழையுடன் அடர்பனி மூட்டம் நிலவியது.
இந்நிலையில் நேற்று காலை முதலே வெயில் நீடித்த நிலையில், மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது வெயில் பளிச்சிட்டது. நகரில் மேகக் கூட்டங்கள் தரை இறங்கியது. காற்றில் ஈரப்பதம், வெயில் என இதமான சீதோஷ்ண நிலை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

