sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

/

மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்


ADDED : டிச 27, 2024 05:19 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பில்டிங் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் அழகர். இவரது 2வது மனைவி புண்ணியவதி 65. அழகர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பூலத்துாரை சேர்ந்த இவர்கள் திருமணத்திற்கு பின் வத்தலக்குண்டில் 15 ஆண்டுகளாக குடியிருந்தனர். கணவர் இறப்பிற்கு பின் முதல் மனைவியின் பிள்ளைகள் புண்ணியவதியை கண்டு கொள்ளவில்லை. பராமரித்தல் இல்லை. சொத்து, பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றனர். புண்ணியவதிக்கு குழந்தை இல்லாததால் ஆதரவற்று வறுமையில் வாடினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்னை அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர்.

திண்டுக்கல் சமூகநலத்துறையினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். வத்தலக்குண்டு போலீசார் புண்ணியவதியை அன்னபூரணி தொண்டு நிறுவனம் உதவியுடன் பழநி காப்பகத்தில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us