இடம் சர்ச்சையில் மோதல்
வடமதுரை: அய்யலுார் எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் கற்பகராணி 37. அதே பகுதி காலி இடத்தில் வீடு கட்டுகிறார். அதே பகுதி நாகேந்திரன் 34, இடம் அரசு புறம்போக்கு நிலம் எனக்கூறி தடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டது. இருதரப்பாக தாக்கி கொண்டனர். இரு தரப்பு புகாரில் வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி காயம்
வடமதுரை: திருச்சி மாவட்டம் மணப்பாறை தாள குளத்துப்பட்டியை சேர்ந்தவர்கள் பெருமாள் 60, தங்கவேல் 60 . நேற்று முன்தினம் டூவீலரில் அய்யலுார் வண்டி கருப்பணசுவாமி கோயில் வந்தனர். சுவாமி கும்பிட்டு விட்டு பாச்சாநாயக்கனுார் பிரிவு அருகே வரும்போது கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.
டூவீலரில் சென்றவர் பலி
வேடசந்துார்: கரூர் பிச்சம்பட்டி வெள்ளைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் சுரேஷ் 39. டூவீலரில் திண்டுக்கல் மாவட்டம் ஆர்.வெள்ளோடு பாளையம் ரோட்டில் வசந்தகதிர்பாளையம் அருகே சென்றபோது நிலை தடுமாறி விழுந்ததில் இறந்தார். குஜிலியம் பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
வேடசந்துார்: திண்டுக்கல் ரோட்டில் லட்சுமணன்பட்டி நால்ரோடு பஸ் ஸ்டாப் அருகே மது விற்ற சேடப்பட்டியை சேர்ந்த ஜானை 51, வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் கைது செய்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாகனம் மோதி பலி
வேடசந்துார்: திண்டுக்கல் ரோட்டில் கிரியம்பட்டி பிரிவு - அருகே நடந்து சென்ற அடையாளம் தெரியாத 65 வயது முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.

