sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

/

 வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

 வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

 வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை


ADDED : டிச 28, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு: பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வரதட்சணை கேட்டு, கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

கொடைரோடு அருகே இராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் 30. ஒலிபெருக்கி உரிமையாளரான இவருக்கும், சடையாண்டிபுரத்தைச் சேர்ந்த சிவகாமி 26 என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. 3-வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகாமி மர்மமான முறையில் உயிரிழந்தார். அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிவகாமியின் உறவினர்கள் நேற்று அம்மைய நாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். வரதட்சணை கொடுமையால் சிவகாமி கொலை செய்யப்பட்டார் என்றும், இந்த கொலைக்கு காரணமான அவரது கணவன் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us