ADDED : அக் 10, 2025 03:28 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: இந்தியா முழுவதும் அக்டோபர் 9ம் தேதி அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல்லில் தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை அஞ்சல் அதிகாரி திருமலைச்சாமி தொடங்கி வைத்தார். அஞ்சல் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். செல்வ மகள் சேமிப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த பதாகைகள் ஏந்தி சென்றனர்.
