sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாக்கடைகளில் கோழிக்கழிவுகள் மக்கள் மறியலால் 5 கடைகளுக்கு சீல்

/

சாக்கடைகளில் கோழிக்கழிவுகள் மக்கள் மறியலால் 5 கடைகளுக்கு சீல்

சாக்கடைகளில் கோழிக்கழிவுகள் மக்கள் மறியலால் 5 கடைகளுக்கு சீல்

சாக்கடைகளில் கோழிக்கழிவுகள் மக்கள் மறியலால் 5 கடைகளுக்கு சீல்


ADDED : ஜன 23, 2025 04:45 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் மார்க்கெட் ரோட்டில் உள்ள கோழிக்கடை கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுவதை கண்டித்து பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

வேடசந்துார் மார்க்கெட் ரோடு வழியாகத்தான் நீதிமன்றம், தாலுகா ஆபீஸ், டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். புதிதாக சாக்கடைகள் அமைக்கப்பட்டது. இங்கு அப்பகுதி கோழி, கறிக்கடை கழிவுகளை கொட்டி வந்தனர். இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டது.

பேரூராட்சி சார்பில் சாக்கடைகளை சுத்தப்படுத்துவது,கழிவுகள் கொட்டுவதை தடுப்பது போன்ற எந்த நடவடிக்கையும் இல்லாததால் வேடசந்துார் கூம்பூர் ரோட்டில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின் மேரி நடவடிக்கை எடுப்பதாக கூற மக்களை கலைந்தனர் . இதை தொடர்ந்து செயல் அலுவலர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள 5 கோழிக்கறி கடைகளுக்கு சீல் வைத்தனர்.






      Dinamalar
      Follow us