ADDED : பிப் 18, 2026 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: அக்ரகாரப்பட்டியில் மல்லிகை சாகுபடியில் மொட்டுப் புழு தாக்குதலை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் ஒளி வலை பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கம் நடத்தப் பட்டது.
வேளாண் கல்லுாரி மாணவி அனிஷா ரோஜா தலைமையிலான குழுவினர் விளக்கம் அளித்தனர்.
மல்லிகை வயலில் சரியான இடத்தில் ஒளி வலை அமைப்பது, இரவு நேரத்தில் பூச்சிகளை ஈர்த்து பிடிக்கும் முறை, பூச்சி தாக்குதல் அளவை அறிந்து மேலாண்மை முடிவுகள் எடுப்பது குறித்து விளக்கப் பட்டது.

