ADDED : மார் 10, 2026 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: தன்னரசு மக்கள் முன்னேற்ற இயக்க சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா சின்னாளபட்டியில் நடந்தது. மாநிலத் தலைவர் கிருபாகரன் தலைமை வகித்தார். மாநில மகளிரணி தலைவர் மேகா, துணைத்தலைவர் கார்த்திகா, மாநிலச் செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகி மலர்விழி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பங்கேற்று நல உதவிகளை வழங்கினார். மாவட்ட செயலாளர் காமேஷ், தி.மு.க., ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் பங்கேற்றனர்.

