நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரையில் பேரூராட்சி நிர்வாகம், திண்டுக்கல் ஜே.ஜே., அருள் பல்நோக்கு மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
பேரூராட்சி தலைவர் நிருபாராணி தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் கணேசன் வரவேற்றார்.
மருத்துவமனை நிறுவனர் அருள்துரைஅரசு தலைமையிலான டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கவுன்சிலர்கள் சகுந்தலா, சுப்பிரமணி, தி.மு.க., நகர துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளிராஜன், இளைஞரணி அமைப்பாளர் சந்தானகிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் பவுன்ராஜ், குமார், கண்ணன், வேல்முருகன் பங்கேற்றனர்.

