ADDED : அக் 11, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 95 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பழநி சப் கலெக்டர் கிசான்குமார் தலைமை வகித்தார். உதவி ஆணையர் பால்பாண்டி, வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து, தாசில்தார் பழனிச்சாமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, சுகாதார மருத்துவ அலுவலர் பிரபு, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், ஊராட்சி தலைவர் சிவராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், ஒன்றிய செயலாளர் தர்மராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அலுவலர் ஹரி கிருஷ்ணன் பங்கேற்றனர்.

