நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம்., ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக மாணவர்களுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி கருத்தரங்கம் நடந்தது.பள்ளி தாளாளர் ரத்தினம் தலைமை வகித்தார்.
நிர்வாக அலுவலர் வாணி முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கீதா வரவேற்றார். ஐ.எம்.ஏ., ஒட்டன்சத்திரம் கிளை செயலாளர் ஆசைத்தம்பி பேசினார். வெற்றி பெற்ற மாணவி நந்தனா ,மாணவர்கள் ஹரி பிரகாஷ் ராகவன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் கவுசல்யா தேவி நன்றி கூறினார்.

