
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ராகு கால பூஜை நடந்தது.
நேற்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ராகுகால வேளையில் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் வாரம் தோறும் நடக்கிறது.
16 வகையான அபிஷேகங்கள்,பைரவருக்கு தயிர்சாத நைவேத்தியம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி , தலைமை அர்ச்சர்கள் பத்ரி ரமேஷ் செய்தனர்.

