ADDED : ஜூலை 17, 2025 12:47 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரை மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் ஜூன் மாத துவக்கம் முதலே கோடையை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. பகலில் கொளுத்தும் வெயில் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்துவதால் மக்கள் பெரும் இன்னலுக்குஆளாகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை வெயில் அடித்தாலும் மதியம் 2 :00 மணி முதலே மேகம் வானமூடத்துடன்காணப்பட்டது. மதியம் 3 :00மணி முதல் 3:30 மணி வரை மழை பெய்தது.
சில நாட்களாக வெயிலால் தவித்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். திருச்சி ரோடு, நேருஜி நகர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில்மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்புவோர் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.
தொடர்ந்து லேசான துாரல் விழுந்த வண்ணம் இருந்தது. மழையால் குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது.