ADDED : பிப் 20, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பள்ளிவாசல்களில் புனித ரம்ஜான் மாத துவக்கத்தை முன்னிட்டு நோன்பு துவக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டுக்கல் மாநகரில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இதில் நேற்று அதிகாலை 5:05 மணிக்கு புனித ரம்ஜான் மாதப் பிறப்பை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் பெரிய பள்ளி வாசலில் தலைமை ஜமாத்தார்கள் முன்னிலையில் இமாம் ரபீக் முகமது தலைமையில் தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று நோன்பு துவக்கினர். மாலை 6:34 மணிக்கு நோன்பு கஞ்சி அருந்தி தொழுகையை நிறைவு செய்து ஈகை நடவடிக்கைகள் குறித்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

