ADDED : மார் 15, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை ஊராட்சியை இரண்டாக பிரித்து சின்னழகு நாயக்கனுாரை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி அறிவிக்கப்பட்ட நிலையில் சின்னழகு நாயக்கனுார் தாசமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம், பாளையம் பேரூர் செயலாளர் கதிரவன், காங்., வட்டார தலைவர் தர்மர், தி.மு.க., நிர்வாகிகள் கருப்பையா, சுப்பிரமணி பங்கேற்றனர்.
