ADDED : ஜன 30, 2026 07:04 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், திண்டுக்கல் முருகபவனம் அருகே அ.தி.மு.க., அபிராமி கூட்டுறவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தைப்பூசத் முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்வகை பழங்கள், சிற்றுண்டி, குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி
எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் வழங்கினார். தொழிற்சங்கத் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன், துணைத் தலைவர்கள் தாமஸ், சசிக்குமார், துணைச் செயலாளர்கள் முரளி, முருகவேல், இணைச் செயலாளர் பெருமாள்ராஜா, உறுப்பினர்கள் பஞ்சாட்சரம், ஞானராஜ், கார்த்திகேயன், விஜய்செந்தில், சரவணன் பங்கேற்றனர்.
