sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

/

 பழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 பழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 பழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ADDED : டிச 06, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப் பட்டன.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செப். 12 ல் மீட்டனர்.

அங்கு இருந்த புதர்களை அகற்றி பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிற்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் 16 கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. டிச. 8 திருஆவினன்குடி கும்பாபிஷேகம் முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தண்டபாணி சுவாமி நிலத்தில் சன்னதி வீதி பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் இணை கமிஷனரும் தண்டபாணி சுவாமி மட நிலத்தின் தக்காருமான மாரிமுத்து தலைமையில் கோயில் அலுவலர்கள் வருவாய்த் துறையினர் வந்தனர். டி.எஸ்.பி.,தனஞ்செயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கோயில் இணை கமிஷனருடன் ஆக்கிரமிப்பு கடை நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராட முயன்ற இவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த கடை வியாபாரிகள் கால அவகாசம் வழங்க கோரினர். இதை தொடர்ந்து போதுமான அவகாசம் வழங்க 16 கடைகளும் அகற்றப் பட்டது.






      Dinamalar
      Follow us