ADDED : மார் 18, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்த சில சிறிய கட்சி கொடி மரங்களை அந்தந்த கட்சியினரே அகற்றினர்.
அதே நேரம் வார்டு பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட கொடி மரங்களை அகற்ற ஆர்வம் காட்டவில்லை. நேற்றுமுன்தினமே பேரூராட்சி ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டும் கம்பங்கள் அகற்றப்படவில்லை. இதனால் பேரூராட்சி நிர்வாகமே ஊழியர்கள் மூலமும், கிரேன் பயன்படுத்தியும் அகற்றுகிறது.

